என்-னின்.வெண்பாவுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறோடு நான்கசையுங் கூட்டியுறழ. அறுபத்துநான்கு மூவசைச் சீராம்.அவற்றுள் இயற்சீர் நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீராம் என்றவாறு. உதாரணம் "மாவாழ்கான் மாவருகான் புலிவாழ்கான் புலிவருகான்." என்பன. (17)
|