இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வேந்து வினை இயற்கை - வேந்தனது வினை இயற்கையாகிய தூது, வேந்தன் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன் உடைத்து. வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை. ' இடனுடைத்து ' என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்சராகிய வழியே நிகழும் என்று கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] (34)
(பாடம்) 1. வேந்தனின். 2. ஏனோர் - குறுநில மன்னர். (நச்சி.)
|