செய்யுளியல்

348 மூவா றெழுத்தே கழிநெடிற் களவே
ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப.

என்-னின். கழிநெடிலடி உணர்த்துதல் நுதலிற்று.

பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவுங் கழிநெடியலடியாம் என்றவாறு.

எனவே பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும்.

(38)