செய்யுளியல்

360விராஅய் வரினும் ஒரூஉநிலை இலவே.

என்-னின். மேற்சொல்லப்பட்ட அடி விரவிவருமாறு வரையறுத்து ஊணர்த்துதல் நுதலிற்று.

மேற் சொல்லப்பட்ட ஐந்தடியுந் தனித்தனி ஆசிரியப்பாவிற் குரித்தாகி வருதலே யன்றி விரவிவரினும் நீக்கப்படாது என்றவாறு .

'ஒருஉநிலை' என்றதனால் தனித்தனிவரினும் விரவிவரினும் ஒக்கும் என்றுகொள்க.

உதாரணம்

"செங்களம் படக்கொன் றவுணர்ந் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட் டியானைக்
கழறொடிச் சேய1 குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே"

(குறுந். 1)
இதனுட் பலவடியும் வந்தவாறு காண்க.
(49)

'1. சேஎய்