செய்யுளியல்

388துள்ளல் ஓசை கலியென மொழிப .
என்- னில் , கலிப்பாவிற்கு ஓசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

துள்ளலோசை கலிப்பாவிற்காம் என்றவாறு .

துள்ளுதலாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடை யுயர்ந்து வருதல் ; கன்று துள்ளிற்றென்றாற் போலக் கொள்க .

உதாரணம்

" அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி ."

(கலித்.11)
என்றவழி ' அரிதாயவறன் ' எனநின்றவழிச் செப்பலோசைத்தாகிய வெண்சீர்ப் பின்னும் வெண்டளைக்கேற்ற சொல்லொடு புணராது ஆண்டெழுந்த ஓசை துள்ளிவந்தமையால் துள்ளலோசை யாயிற்று.

(77)