செய்யுளியல்

424கைக்கிளை தானே வெண்பா வாகி
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.
என் - னின். எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

கைக்கிளைப் பொருண்மை வெண்பாவினால் வருதலின்றி முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரும் என்றவாறு.

இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல்.

"மருட்பா ஏனை இருசார் அல்லது
தானிது என்னுந் தன்மை இன்றே. "

(தொல். செய். 81)

என ஓதினார் என்றுகொள்க. அது.

"உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன
கரவரு காமங் கனல1 இரவெதிர
முள்ளெயி றிலங்கு முகிணகை
வெள்வளை நல்காள் வீடுமென் உயிரே."

(பு. வெ. கைக்கிளை.-9)

எனவரும்.
(113)

1. (பாடம்) கனற்ற.