என் - னின் இனிக் கலிப்பாப் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒத்தாழிசைக் கலியும் கலிவெண்பாட்டும் கொச்சகமும் உறழ்கலியும் என நான்கு வகைப்படுங் கலிப்பா என்றவாறு. அவையாமாறு முன்னர்க் காட்டுதும் . "இருவயின் ஒத்தும் ஒவ்வா இயலினுந் தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங் கலப்பே யாயினும் புலப்பே யாயினும் ஐந்திணை மரபின் அறிவுவரத் தோன்றிப் பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது கலியெனப் படூஉங் காட்சித் தாகும்." என்று அகத்தியனார் ஓதுதலின் கலிப்பா அகப்பொருளென வழங்கும்.(123)
|