என் - னின் , தாழிசைக்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. தாழிசைகள் தரவிற் சுருங்கிவரும் என்றவாறு. 'தரவகப்பட்ட மரபின ' என்றதனால் தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாதென்பதூஉம் , மூன்றடியானும் இரண்ட்டியானும் வரப்பெறும் என்பதூஉங் கொள்க. வருகின்ற சூத்திரத்துள் " ஒத்து மூன்றாகு மொத்தா ழிசையே " ( செய்யு 137) எனக்கூறுதலானும் இப்பாவினை ஒத்தாழிசைக்கலி யெனக் கூறுதலானுந் தாழிசை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வருமென்று கொள்க. (127)
|