செய்யுளியல்

4541அம்போத ரங்கம் அறுபதிற் றடித்தே
செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை.
என்-னின். அம்போதரங்க வொருபோகுக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று.

அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக் கெல்லையாம். நடுவாகிய நிலை சிறுமைக்கெல்லையாம் என்றவாறு .

செம்பால் வாரம் என்பது செம்பாதி எனவுமாம் . முப்பதடிச் சிறுமை என்றவாறு.

(142)

1.இனிச், சிற்றெண் பதினாறும் அராகஅடி நான்குமாக இழுபதடி பெறப்படுங் கொச்சகம் இருமூன்றாகிய பத்தடியின் இகவாது அறுபதடி பெறும் என்றவாறாயிற்று.(தொல்.பொருள்.462.பேரா.)