செய்யுளியல்

466எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை யில்லன ஆறென மொழிப.
என்- னின். அடிவரையறையில்லாதன வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று.

எழுநிலமாவன பாட்டு, உரை, நூல். வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு.

(154)