செய்யுளியல்

493கிழவன் தன்னொடுங் கிழத்தி தன்னொடும்
நற்றாய் கூறல் முற்றத்1 தோன்றாது.
என் - னின். நற்றாய்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று.

தலைவனொடுந் தலைவியொடும் நற்றாய்கூற்று நிரம்பத் தோன்றாது என்றவாறு.


எனவே, ஏனையோர்க்கே கூறும் என்றவாறாம். உதாரணம் வந்துழிக் காண்க.
(180)

1.`முற்ற' என்றதனால் தானே தலைவனாதலால் தலைவன் தமர் யாவரும் கூறார்; முற்கூறப்பட்டார் அல்லர் என்பது கொள்க. (தொல், பொருள்,504.பேரா.)