செய்யுளியல்

506எண்வகை இயனெறி பிழையா தாகி
முன்னுறக் கிளந்த முடிவின ததுவே
என்-னின் ,மெய்ப்பாடாவது உணர்த்துதல் நுதலிற்று.

அது நகை முதலாகிய எட்டுமெய்ப்பாட்டு நெறியையும் பிழையாதாகி மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தையுடைத்து என்றவாறு.

அஃதாமாறு மெய்ப்பாட்டியலுட் காண்க.

(193)