இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து முடிக என - (உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிக என , உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம் - உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம். எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உருவன்றிப் பொருளுவமையாற் கொள்ளப்படுவது. உதாரணம் "வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து உண்டாடுந் தன்முகத்தே செவ்வி உடையதோர் வண்தா மரைபிரிந்த வண்டு" (தண்டியலங்காரம்); ஒட்டணி இது வண்டோரனையர் மாந்தர்எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. (51)
1.இறுவதை.
|