அகத்திணை இயல்

51உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே1 உள்ளுறை உவமம்.

இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து முடிக என - (உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிக என , உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம் - உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம்.

எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உருவன்றிப் பொருளுவமையாற் கொள்ளப்படுவது.

உதாரணம்

"வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடுந் தன்முகத்தே செவ்வி உடையதோர்
வண்தா மரைபிரிந்த வண்டு"

(தண்டியலங்காரம்); ஒட்டணி

இது வண்டோரனையர் மாந்தர்எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று.

(51)

1.இறுவதை.