என்-னின் ,நிறுத்தமுறையானே துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அகப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்கும் புறப்பொருளாகிய ஏழுபெருந்திணைக்குமுரிய மாந்தரும் பரந்து பட்ட மாவும் புள்ளும் , உம்மையால் மரமுதலாயினவும், பிறவவண் வரினுமென்றதனால் நிலம் நீர் தீ வளி முதலாயினவும் செய்யுட்கண் வருமிடத்துத் திறப்பாடுடைத்தாக ஆராய்ந்து தத்தமக்கேற்ற பண்போடும் பொருந்திய மரபோடும் முடியின், அவ்வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறையென்று கூறப்படும் என்றவாறு. (197)
1.(பாடம்)அவ்வம். 2. இயலின்.
|