என்-னின். இயைபுவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இடையெழுத்துமிக்கு வருவது இயைபுவண்ணமாம் என்றவாறு. "வால்வெள் ளருவி வரைமிசை இழியவும் கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும் வாளுகிர் உளியம் வரையகம்இசைப்பவும் வேலொளி விளக்கிநீ வரினே யாரோ தோழி வாழ்கிற் போரே." (யாப்.வி.ப.383) எனவரும்.(206)
|