அளபெடைபயின்று வருவது அளபெடை வண்ணமாம் என்றவாறு.
"தாஅட் டாஅ மரைமலர் உழக்கிபூஉக் குவளைப் போஒ தருந்திக்காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்மாஅத் தாஅள் மோஒட் டெருமை."