செய்யுளியல்

530அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்.
என் - னின் , அகைப்பு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று.

அறுத்தறுத்தியலுவது அகைப்பு வண்ணமாம் என்றவாறு.


உதாரணம்

"தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தையிடை
அசைந்த வாரமலைப் பட்டு ரண்ணலென்பான்
இயன்ற சேனைமுர சிரங்குந் தானையெதிர்
முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலினவன்."

(யாப்.வி.ப.387)

எனவரும்.

(217)