என் - னின் ஏந்தல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும் என்றவாறு. உதாரணம்"கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலே கூடலுங் கூடல் அரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு." (யாப்.வி.ப.388) எனவரும்.(219)
|