மரபியல்

548அவற்றுள்,
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை.

என்-னின் மேல் அதிகரிக்கப்பட்ட மூவகைப் பெயர்க்குஞ் சிறப்பு விதியுடையன இச்சூத்திரமுதலாக வருகின்ற சூத்திரங்களாற் கூறப்படுகின்றன.

மேற் சொல்லப்பட்டவற்றுட் பார்ப்பு பிள்ளையென்னும் இரண்டும் பறவையி னிளமைப் பெயர் என்றவாறு.

இவ்வோத்திற் சூத்திரத்தாற் பொருள் விளங்குவனவற்றிற்கு உரை யெழுதுகின்றிலம்.

(4)