இது கைக்கிளைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று . (இ-ள்) முன்னைய நான்கும் - மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற நிலைமை நான்கும் , முன்னதற்கு என்ப முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்ப. அவையாவன:- ஏறா மடற்றிறம் , இளமை தீராத்திறம் , தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன . ஏறாமடற்றிறம் வெளிப்பட இரத்தலாம் , இளமை தீராத்திறம் , நலம் பாராட்டலாம் . தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , புணராவிரக்கமாம். மிக்க காமத்தின் மாறாகாத்திறம் , நயப்புறுத்தலாம். இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு. "கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம் அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது அத்திணை யானே யாத்தனர் புலவர்." இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப வருமென்பதூஉம் , பெருந்திணை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க .
1.முன்னைய நான்கும் : இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறுலும் என்ற குறிப்பு நான்கும் . (நச்சி.)
|