மரபியல்

568பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே

என்றது, ஓரறிவுயிராகிய புல்லும் மரனும் இளமைப்பெயர் பிள்ளை முதலாகச் சொல்லப்பட்ட நான்குங் கொள்ளவும் அமையும் என்றவாறு.

உம்மை எதிர்மறையாகலான் கன்றென்றதே பெரும்பான்மை.

(24)