மரபியல்

593சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மாயிருந் தூவி மயி1லலங் கடையே.

மயிலல்லாத புள்ளின் கண் ஆண்பெயர் சேவலென்று கூறப்படு மென்றவாறு.

சிறகு என்றது ஆகுபெயர்.

(49)

1. `மாயிருந்தூவி மயில்' என்றதனான் அவை தோகை உடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க. எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது. (தொல். பொருள்.603.பேரா.)

(49)