மரபியல்

594ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப.

ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் ஏற்றையென்னும் பெயர் உரித்தென்றவாறு.

ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக்கண்ணும் கொள்ளப்படும்.

(50)