நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப்பெயரும் தத்தந் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி அவையவை வருதல் பெறும் என்றவாறு. (75)
1. 'உடைத் தொழிற் கருவி' என்பன அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்கும் கருவியும் முதலாயின; அரசர்க்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு நாவாயும் மணியும் மருந்தும் முதலாயின; வேளாளர்க்கு நாஞ்சிலும் சகடமும் முதலாயின. (தொல். பொருள். 629. பேரா.)
|