அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில வென்றவாறு.
அஃதாவது மந்திரி புரோகிதனாகியவழிக் கொடியும் குடையும் கவரியும் தாரு முதலாயின அரசராற்பெற்று அவரோடு ஒருதன்மையராகியிருத்தல்.