மரபியல்

641வழியெனப் படுவ ததன்வழித் தாகும்.
என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு.

அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

(97)