உரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சூத்திரத்துட் பொருளொழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றி யமையாதனவெல்லாங் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகு மென்றவாறு. (105)
1. மேற்காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற்கு ஏற்பன எல்லாம் அதிகாரத்தால் கொள்ளப்படும் . அவை ஏதுவும் நடையும் எடுத்துக்காட்டும் சூத்திரம் சுட்டுதலும் என்று இன்னோரன்ன கொள்க.(தொல்.பொருள்.659.பேரா.)
|