இது, மருதத் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்)வைகறை விடியல் மருதம் - வைகறை விடியலும் மருதத்திற்குக் காலமாம். வைகறையாவது இராப்பொழுதின் பிற்கூறு. விடியலாவது, பகற்பொழுதின் முற்கூறு. பருவம் வரைந்தோதாமையின், அறுவகைப் பருவமும் கொள்ளப்படும். இது நெய்தற்கும் ஒக்கும். (9)
1. வைகுறு விடியல் (நச்.) கங்குல் வைகிய அறுதியாதல் நோக்கி வைகறை எனவும் கூறுப. (நச்.)
|