5. தொகை மரபு

இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மேல் அகத்தோத்தினுள் இருபத்துநான்கு ஈற்றிலும் விரிந்து முடிவனவற்றை யெல்லாம் தொகுத்து முடித்தலின் தொகைமரபு எனப்பட்டது. மேல் புணரியலுட் கூறிய கருவிகளாற் செய்கை கூறும் வழி, தொக்குப்புணருஞ் செய்கை கூறலிற் புசணரியலோடு, இயைபுடைத்தாயிற்று.

1.உயிரீறு மெய் யீறுகளின் பொதுப்புணர்ச்சி மெல்லினம் தோன்றுமிடம்

144க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்
ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவயி னான.

இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழிக்கண்ணும், உயிர்மயங்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கியதோர் வழிமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்மெழுத்து இயற்கை - உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் க ச த ப க்களை முதலாகவுடைய மொழிகளின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், சொல்லிய முறையான ங ஞ ந ம வென்னும் ஒற்றாகும் - மெல்லெழுத்து மேற்சொல்லும் முறைமையான க ச த ப க்களுக்கு நிரனிறை வகையானே ங ஞ ந ம வென்னும் ஒற்றாகும், அன்ன மரபின் மொழிவயின் ஆன - அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகளிடத்து.

எ - டு: விளங்கோடு ,செதில் , தோல் ,பூ என வரும் .

தோன்றுமென்றதனால் , தோன்றி நின்றனவும் அவ்வாறே திரிந்து மெல்லெழுத்தா மென்பது மரங்குறிது,சிறிது , தீது , பெரிது என வரும் . அன்னமரபின் மொழியன்மையின் விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்று.

(1)