2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

`கலம்' அத்துச் சாரியை பெறுதல்

169அத்திடை வரூஉங் கலமென் அளவே.

இதுவும் அது.

(இ-ள்) கலம் என் அளவு இடை அத்து வரும் - கலம் என்னும் அளவுப்பெயர் (குறையொடு புணரும் வழி) இடையில் அத்து வரும்.

எ - டு: கலத்துக்குறை என வரும்.

இஃது, `கலன்' என்னும் னகரவீறேல், நிலைமொழி ஒற்றுக்கேடும் வருமொழி ஒற்றுப்பேறும் "அத்தே வற்றே" (புணரியல்-31) என்பதனாற் கொள்ளப்படும். `கலனெனளவு' என ஓதாதது செய்யுளின்பம் நோக்குப் போலும். சாரியை முற்கூறியவதனான், இன்சாரியை பெற்றவழி முன்மாட்டேற்றான் எய்திய வல்லெழுத்து வீழ்க்க.

(26)