கற்பியல்

190காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
1சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

இது, தலைவற்கும் தலைவிக்கு முரியதோர் மரபுணர்த்திற்று.

சிறந்தது பயிற்ற லாவது - அறத்தின்மேல் மன நிகழ்ச்சி.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

(51)

1. சிறந்தது அறம்பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம். சான்ற காமம் என்றார், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. ஏமஞ்சான்ற வாவன வானப்பிரத்தமும் சந்நியாசமும். (தொல். பொருள். 192. நச்சி.)