என் - எனின். இதுவுமொருசார் மரபுணர்த்துதல் நுதலிற்று. அன்னை என்னை என்று சொல்லுதலும் உள; அவை முன்புள்ளார் சொல்லிப்போந்த முறைமை. அவை தாம் சொல்லினானும் சொல்லிற் கங்கமாகிய எழுத்தினானும் பொருள் தோன்றாத மரபினையுடைய என்றவாறு. எழுத்தென்பது எழுத்தாகப் பிரித்தாற் படும் பொருள் வேறுபாடு. இவை அகத்தினும் புறத்தினும் வரும் . "ஒரீஇ2 ஒழுகு மென்னைக்குப் பிரியலென் மன்யான் பண்டொரு காலே". (குறுந். 203) என்பது தலைமகள் தலைமகனைக் கூறியது."அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் " (குறுந். 33) என்பது தோழிக்குக் கூறியது."என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்". (குறள். 771)
"என்னை புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே." (புறம். 84) இவையும் `என்றலும்' என்ற வும்மையால் நிகரனவுங் கொள்க.
"எந்தைதன் உள்ளங் குறைபடா வாறு" என வரும்.(50)
1. தலைவன் தலைவியை அன்னையெனக் கூறலும் உளது என்பாரும் உளர். (தொல், பொருள், 246. நச்சி.) (பாடம் ) 2. ஒரியினன்.
|