என்- னின் . இளிவரலாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் இளிவரலுக்குப் பொருளாம் என்றவாறு. இவை நான்குந் தன் மாட்டுத் தோன்றினும் பிறர்மாட்டுத் தோன்றினும் நிகழும். உதாரணம் " தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று ." (நாலடி . 14) என்றது பிறர்மாட்டு மூப்புப்பற்றி இழிப்புப் பிறந்தது.பிணியென்பது - பிணியுறவு கண்டு இழித்தல் . அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம் . " மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் துச்சிலை - யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் . " (நாலடி . 41) இது உடம்பினை அருவருத்துக் கூறுதல் . வருத்த மென்பது - தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத்தானும் இழிப்புப் பிறக்கும் என்றவாறு . உதாரணம் " செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று . " (குறள் . 1255) இது பிறன் வருத்தங் கண்டு இழிப்புப் பிறந்தது . உதாரணம்" தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய2 கேளல் கேளிர் வேளாண்3 சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்4 தாமிரந் துண்ணுமளவை5 ஈன்ம6 ரோவிவ் வுலகத் தானே ." (புறம் . 74 ) இது தன்மாட்டு வருத்தத்தான் இழிப்புப் பிறந்தது . மென்மை என்பது - நல்குரவு " அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் . " (குறள் . 1047) " இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் . " (குறள் . 1044) என வரும் .இன்னும் " யாப்புற என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க . அவை நாற்றத்தானுந் தோற்றத்தானும் புல்லியன . இவற்றிற்கெல்லா செய்யுள் வந்தவழிக் காண்க. (6)
1. புக்கிலை 2. 'யாப்புறவந்த ' என்பது திட்பமுற வந்த என்றவாறு அங்ஙனம் கூறிய மிகையானே வீரம் முதலாயின பற்றியும் இளிவரல்பிறக்கும் என்றவாறு . ( தொல் , பொருள் , பேரா .) 3.(பாடம்) இடர்ப்படத்தீய .
4. வேளன .
5. தணியோர் .
6. மளவையி .
7. னாம.
|