என்-னின். இது தலைமக்கட்காகாத குணம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. நிம்பிரி என்பது-அழுக்காறு அவ்வியம் என்பதும் அது. கொடுமை என்பது-அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி வியப்பென்பது-தம்மைப் பெரியராக நினைத்தல். புறமொழி என்பது-புறங்கூறுதல். வன்சொல் என்பது-கடுஞ்சொற் கூறல். பொச்சாப் பென்பது-தம்மைக்கடைப்பிடியாமை.அது சோர்வு. மடிமை என்பது-முயற்சி யின்மை. குடிமையின்ந்புறல் என்பது-தன்குலத்தினானுந் தன்குடிப் பிறப்பினானுந் தம்மை மதித்து இன்புறுதல். ஏழைமை என்பது-பேதைமை. மறப்பு என்பது - யாதொன்றாயினுங் கற்றதனையுங் கேட்டதனையும் பயின்றதனையும் மறுத்தல் , ஒடு எண்ணின்கண் வந்தது . ஒப்புமை என்பது- ஆண்பாலாயினும் பெண்பாலாயினுந் தான் காதலிக்கப் பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ளநிகழ்ச்சி . அது உலகின்கட் கீழ்மக்கள் மாட்டுங் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்காகாதென விலக்கப்பட்டது . என்றிவை யின்மை யென்மனார் புலவர் என்பது - இச் சொல்லப்பட்டன இல்லையாதலும் வேண்டும் ; மேற்சொல்லப்பட்டவற்றோடுங் கூட்ட என்றாவாறு. மேற்சொல்லப்பட்டவற்றொடு கூடுதல் அதிகாரத்தான் வந்தது . இவ்விரண்டு சூத்திரத்தானும் ஒருமுகத்தானாய இலக்கணங் கூறியவாறு. (26)
1. பிறப் பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்......உருவு நிறுத்த காமவாயில் என்பது, பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்று மேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு என்றவாறு. (தொல். பொருள். 273. பேரா.) 1. வியப்பு - தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந்தோழுகுதலும் , குணத்தின் மேற்கொண்டு தன்னை வியத்தலும் ......... வன்சொல் . கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொல் ........ ஏழைமை நுழைந்த உணர்வினர் அன்றிவரும் வெண்மை .............. (தொல் . பொருள் 274 . பேரா.)
|