உவமையியல்

273விரவியும் வரூஉம் மரபின1 என்ப.

என்-னின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஓரோவொரு பொருளான் வருதலின்றி இரண்டும் பலவும் விரவியும் வரும் மரபினுடைய என்றவாறு.

உம்மை இறந்தது தழீஇயிற்று.

"இலங்குபிறை யன்ன விலங்குவால்2 வையெயிற்று"

(அகம்.கடவுள் வாழ்த்து)

என்றவழி வடிவும் நிறனும் விரவிவந்தது . பிறவும் அன்ன . இன்னும் " விரவியும் வரூஉம் மரபின " என்றதனாற் பலபொருள் விரவிவந்தது.

" அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ "

(கலித் . 84)

என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும புதல்வற்கும் உவமையாயினும் தோற்றத்திற் கிரண்டும் ஒருங்குவந்தமையான் வேறோதப்பட்டது . இன்னும் ' விரவியும் வரூஉம் மரபின " என்றதனால் தேன்மொழி ' எனத் தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும் மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலுங் கொள்க . பிறவும் இந்நிகரனவெல்லாம் இதுவே ஒத்தாகக் கொள்க.

(2)


1.'மரபின' என்றதனான் அவை அவ்வாறு விராய் வருதலும் மரபே; வேறு வேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க.(தொல். பொருள்.277. பேரா.)

2.(பாடம்) விளங்குவால்.