உவமையியல்

277முதலுஞ்1 சினையுமென் றாயிரு பொருட்கு
நுதலிய மரபி னுரியவை யுரிய .

என் -னின் , இஃது உரிமை க்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

ஐயம் அறுத்ததூஉமாம்.

முதலுஞ் சினையுமென்று சொல்லப்பட்ட இருவகைப் பொருட்குங் கருதிய மரபினான் அவற்றிகேற்பவை உரியவாம் என்றவாறு .

சொல்லதிகாரத்துட் ,

" செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்
கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே"


என்றார் . அவ்வாறன்றியுவமைக்கு நியமமில்லை என்ற வாறாயிற்று .

" ஒருகுழை யவன்போல் இணர்சேர்ந்த மரா அமும் "

(கலித் . 26 )

என்பது முதற்கு முதல் உவமமாயிற்று .

" அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
குடைநிழல் தோன்றுநின் செம்மலைக் காணூஉ."

(கலித் . 84)

என்பது முதற்குச் சினை உவமமாயிற்று

" தாமரை புரையுங் காமர் சேவடி"

(குறுந் கடவுள் வாழ்த்து )

என்பது சினைக்குச் சினை யுவமமாயிற்று.

" நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி."

(அகம் . 84 )

என்பது சினைக்கு முதல் உவமமாயிற்று.

(6)


1. இதன் கருத்து , முதலொடு முதலும் , சினையொடு சினையும் , முதலொடு சினையும் , சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்கு உரிய எனவும் அங்ஙனம் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கூறியவாறு . ( தொல் . பொருள் . 281 . பேரா . )