உவமையியல்

3081தடுமாறு வரலும் கடிவரை வின்றே.

என் - னின். இதுவும் உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது என்றவாறு.

தடுமாறுத லாவது - ஐயமுறுதல். எனவே ஐயநிலையுவமமுங் கண்டு கொள்க.

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து."

(குறள். 1085)

என்றும்,

"ஈங்கே வருவாள் இவள்யார்கொலாங்கேயோர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல்வெறுப்பினால்
வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல்.

(கலித் . 56)

என்றும் வரும் பிறவும் அன்ன

(37)


1.(பாடம்) தடுமாறுவமம்.