என்பது நிறுத்தமுறையானே அசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. குறிலும் நெடிலுங் குறிலிணையுங் குறினெடிலுங் தனியேவரினும் ஒற்றொடுவரினும், ஆராயுங்காலத்து நேரசையும் நிரையசையுமா மென்றவாறு. இதுவு மொருநிரனிறை; முந்துற்ற நான்கு மொருபொருளாய்ப் பின்னிரண்டாகிவரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான். கோழி வேந் தன், என நான்குநேரசையும், வெறி சுறா நிறம் குரால், என நான்கு நிரையசையும். (3)
|