இது, மேற்சொல்லப்பட்ட மூன்று வகைப் பொருளினும் முதற்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு - முதல் என்று சொல்லப்படுவது நிலமும் காலமும் ஆகிய அவ்விரண்டினது இயற்கை, என மொழிப இயல்பு உணர்ந்தோர் -என்று சொல்லுவர் உலகின் இயல்பு உணர்ந்தோர். இயற்கை என்பதனால்1செய்துகோடல் பெறாமை அறிந்து கொள்க. நிலம் என்பதனால் பொருள்தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க. [ஏகாரம் ஈற்றசை]. (4)
1.செய்துகோட் பெருமை. |