செய்யுளியல்

533உருட்டு வண்ணம்1 அராகந் தொடுக்கும்.

என் - னின் உருட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்கும் என்றவாறு.


உதாரணம்

"தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
தழலென விரிவன பொழில்."

(யாப்.வி.ப.299)

எனவரும்.
(220)

1.இது நெகிழாது உருண்ட ஓசையாகலிற் குறுஞ்சீர்வண்ணம் எனப்படாது உருட்டு வண்ணம் எனப்படும் என்பது ( தொல் , பொருள். 544. பேரா)