கற்பியல்119

அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் 

     

நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் 

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் 

குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் 

நாமக் காலத்து உண்டெனத் தோழி 

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் 

அல்லல் தீர ஆர்வமொ டளைஇச் 

சொல்லுறு பொருளின் கண்ணும், சொல்லென 

ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது 

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென 

அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் 

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் 

அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும் 

ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக் 

களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி 

அலமர லுள்ளமொடு அளவிய விடத்தும் 

அந்தரத் தெழுதிய எழுத்தின் மான 

வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் 

அழியல் அஞ்சலென்று ஆயிரு பொருளினும் 

தானவட் பிழைத்த பருவத் தானும் 

நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிப் 

பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் 

தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் 

புதல்வர்ப் பயந்த புனிறுதீர் பொழுதின் 

நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி 

ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் 

செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் 

பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது 

உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி 

அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் 

மெல்லென் சீறடி புல்லிய இரவினும் 

உறலருங் குரைமையின் ஊடல் மிகுந்தோளைப் 

பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் 

பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்