| அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் |
| நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் |
| பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் |
| குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் |
| நாமக் காலத்து உண்டெனத் தோழி |
| ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் |
| அல்லல் தீர ஆர்வமொ டளைஇச் |
| சொல்லுறு பொருளின் கண்ணும், சொல்லென |
| ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது |
| வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென |
| அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் |
| அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் |
| அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும் |
| ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக் |
| களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி |
| அலமர லுள்ளமொடு அளவிய விடத்தும் |
| அந்தரத் தெழுதிய எழுத்தின் மான |
| வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் |
| அழியல் அஞ்சலென்று ஆயிரு பொருளினும் |
| தானவட் பிழைத்த பருவத் தானும் |
| நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிப் |
| பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் |
| தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் |
| புதல்வர்ப் பயந்த புனிறுதீர் பொழுதின் |
| நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி |
| ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் |
| செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் |
| பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது |
| உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி |
| அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் |
| மெல்லென் சீறடி புல்லிய இரவினும் |
| உறலருங் குரைமையின் ஊடல் மிகுந்தோளைப் |
| பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் |
| பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் |