| பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் |
| நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் |
| சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியும் |
| காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் |
| தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் |
| உடன்சேறற் செய்கையொடு அன்னவை பிறவும் |
| மடம்பட வந்த தோழிக் கண்ணும் |
| வேற்றுநாட் டகல்வையின் விழுமத் தானும் |
| மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் |
| அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் |
| பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் |
| காமக் கிழத்தி மனையோள் என்றிவர் |
| ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் |
| சென்ற தேஎத் துழைப்புநனி விளக்கி |
| இன்றிச் சென்ற தன்னிலைக் கிளப்பினும் |
| அருந்தொழில் முடித்த செம்மற் காலை |
| விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் |
| மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் |
| கேளிர் ஒழுக்கத்துப் புணர்ச்சிக் கண்ணும் |
| ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப் |
| பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் |
| எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன |
(5) |
க - து : | கற்பொழுக்கத்தின்கண் தலைமகனிடத்து நிகழும் கூற்றுவகை இவையென அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. |
குறிப்பு : இருவகைக் கைகோளினும் தலைவன் தலைவியர்க்கு உரியவாக வகுத்தோதப்பெறும் கூற்றுக்கள் - கிளவிகள் யாவும் அகத்திணை யுள்ளும் புறத்திணை யுள்ளும் மரபியலுள்ளும் உலகியலான் கூறப்பெற்றமைந்த அந்தணர் முதலிய நாற்பாலார்க்கும், வேந்தனாற் சிறப்புநிலை எய்தியோர்க்கும் ஏனை வினைவலபாங்கினோர்க்கும் அவரவர் நிலைக்குரியவாகப் பாடல் சான்ற புலனெறி வழக்குப்பற்றித் தொகுத்துரைக்கப் பட்டனவாகும். இவை யாவும் ஒவ்வொருவர் மாட்டும் நிகழும் எனக் கொள்ளற்க - யாவும் இம்முறையானே நிகழும் எனக்கருதற்க. அவரவர் நிலைமைக்கேற்பச் சில நிகழும்; சில நிகழா. சில பொதுவாகவும் சில சிறப்பாகவும் நிகழும் யாவும் இலக்கண நோக்கில் அமைந்தனவாகும் என அறிந்து கொள்க. |