கற்பியல்181

கலக்கமாவது  :  இத்தகைய  கற்பும்   பொறையும்   அன்புமுடையாள்
இன்புறுதற்கியலாமல்  முதிர்ந்தமை  எண்ணியும், இத்தகைய  நன்கலனாகிய
புதல்வனை   ஈன்றளித்தாளைப்   பிரியாது   உடனுறைதற்கு  இடையூறாக
அமைந்துள்ள  கடமைகளை எண்ணியும் கலங்குதல். அவற்றை விலக்கற்குத்
தன்னால்   இயலாமை  நோக்கிச்  செயலறவுறுதலின்  "இறந்த   துணைய"
என்றார்.
 

அவை  வழிவழி   வரும்  குலமரபும், கடமையும்  பற்றி  அமைதலான்
கலங்காமைக்கும் உரியனாதலின் உம்மை எதிர்மறை.
 

மக்களின்  உளவியல்பும்  உலகியல் வழக்கும்  நோக்கி முந்து நூலோர்
அமைத்த  இன்னோரன்ன  இலக்கணச்  சூத்திரங்கட்கு  ஆரியரது  மிருதி
நூல்களையும்  பிற ஏதுக்களையும்  கருதி உரையாசிரியன்மார் உரை  கூறிச்
சென்றனர். இத்தகைய மரபுகளை மாணாக்கர் ஓர்ந்துணர்வாராக.
 

சூ. 175 :

தாய்போற் கழறித் தழீஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப

கவவொடு மயங்கிய காலை யான

(32)
 

க - து : 

இல்லறக்     கிழமையளாகிய    தலைவிக்குரியதோ    ரியல்பு
கூறுகின்றது.
 

பொருள் :தன்னை முயங்குதலான் தலைவன் பெருமகிழ்வுறுங் காலத்து
மேல்   நின்று     மெய்கூறும்     தாயரைப்போலக்   கழற்றுரை   கூறி
இன்புறத்தழுவிக்கோடல்     ஆராய்தலையுடைய      மனைக்கிழத்திக்கும்
உரியதெனக் கூறுவர் புலவர்.
 

மனைக்கிழத்திக்கும்   என்ற   உம்மை,  காதற்  சோர்விற்   கடப்பாட்
டாண்மையின் தாய்போற் கழறுதல் (கற்-10)  காமக் கிழத்திக்கேயன்றி எனப்
பொருள் தந்து நிற்றலின் இறந்ததுதழீஇய எச்ச உம்மை.
 

தலைவனது   கடமையும்  தலைமைப்பாடும்   அவனது அயன்மைக்கும்
செயல்கட்கும் காரணமாதலை  உணர்ந்தொழுகுதலின் "ஆய்மனைக் கிழத்தி"
என்றார்.
 

சூ. 176 :

அவன்சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்

மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்

செல்வன் பணிமொழி இயல்பாக லான

(33)
 

க - து : 

கற்பொழுக்கத்திற்குரியதொரு சிறப்புக் கூறுகின்றது.