186கற்பியல்
எ - டு :

காமம் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

குளகுமென் றாள்மதம் போலப்

பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே

(குறு - 136)
 

சூ. 185 : 

குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்
(42)
 

க - து : 

இதுவுமது.
 

பொருள் :தலைவன் குறிப்பினைக் குறித்துப் பாங்கன் எதிர் மொழிதல்
சுருங்கித் தோன்றும். அஃதாவது சிறுபான்மையாக நிகழும் என்றவாறு.
  

சூ. 186 :

துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்

வன்புறுத் தல்லது சேறல் இல்லை

(43)
 

க - து : 

வினைவயிற் பிரியும் தலைமகற்காவதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :  தலைவனது  செலவைக்  குறிப்பானறிந்து  தலைவி துன்ப
மிக்க பொழுதினும் அஃதறியாது ஒழுகும் பொழுதினும் எல்லாம்  தலைவன்
செய்வினைக்கண்   பிரியுமிடத்து  இன்னே   வினை  முடித்து  மீள்வேன்
எனத்    தன்    அன்பினையும்    தலைவியது    பண்பினையும்   கூறி
வற்புறுத்தியல்லது பிரிந்து செல்லுதல் புலனெறி வழக்கில்லை.
 

எ - டு :

அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்

பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்

புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப்

பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர்

வருவர் கொல்வயங் கிழாய்!

(கலி-11)
 

எனத்தலைவி கூறியவாறு கண்டுகொள்க.
 

சூ. 187 :

செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே

வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்

(44)
 

க - து : 

இது தலைவற் குரியதோரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :  ஓதல் முதலாய வினைக்கண் பிரிதலைக் கருதிய தலைவன்
போதலைத்  தவிர்ந்து  இகழ்ந்திருத்தல்   செல்லாமைக்குரியதன்று.  அஃது
தலைவியை    வற்புறுத்தி    ஆற்றுவித்துப்   பிரிதலைக்   கருதுதலாகிய
தவிர்ச்சியாகும்.