எ - டு : | 'அளிநிலை பொறா அது' என்னும் அகப்பாட்டினுள் | (5) |
| "மணியுரு விழந்த அணியழி தோற்றம் |
| கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி |
| உழைய மாகவும் இனைவோள் |
| பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே" |
எனப் பின்னர் ஆற்றுவித்தலைக்கருதி அழுங்கியவாறு கண்டுகொள்க. |
சூ. 188 : | கிழவி நிலையே வினையிடத் துரையார் |
| வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் |
(45) |
க - து : | இது வாயில்களின் கூற்றுப்பற்றியதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவன் வினைவயிற்பிரிந்து சென்று வினை நிகழ்த்தும் அவ்விடத்தின்கண் சென்று வாயிலார் தலைவியது நிலையினை உரைத்தல் செய்யார். அவன் அவ்வினையை முடித்த வென்றிக்காலத்து அவர் கூற்று விளக்கமுறத் தோன்றும். |
வினையிடத்துச் சென்றுரைப்பின் அஃதவற்கு இடையூறாமாதலின் 'உரையார்' என்றும் வினைமுடித்த பின் அவ்வென்றிக் களிப்பால் அவன் உள்ளம் விழா முதலியவற்றின் மேற்செல்ல வொட்டாமல் எடுத்துரைத்தலின் விளங்கித் தோன்றும் என்றும் கூறினார். இதற்கு உரையாசிரியன்மார் கூறும் உரை விளக்கம் பாசறைப் புலம்பலின் பாற்படுமென்க. |
சூ. 189 : | பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் |
| நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் |
| பரத்தையிற் பிரிந்த காலை யான |
(46) |
க - து : | பரத்தையிற் பிரிவின்கண் தலைமக்கட் காவதொரு முறைமை கூறுகின்றது. |
பொருள் : பரத்தை காரணமாகப் பிரிந்த காலத்தின்கண் தலைவி பூத்தமையறியின் பூப்பின் புறப்பாட்டெல்லையாகிய பன்னிரண்டு நாளினும் தலைமக்கள் தலைவியை விட்டுப்பிரிந்துறைவாரல்லர் எனக் கூறுவர் புலவர். |
இப்பிரிவு பெரிதும் இடையிருவகையோர்க்கண் நிகழும் என்பது பற்றிப் பன்மையாற் கூறினார் என்க. அக்காலம் கரு வயிற்றுறுதற் குரியதாகலின் நீத்தகன்றுறையார் என்ப என்றார். |