196பொருளியல்

சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாது

ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ

அருளா னாகலின் அழிந்தி வண்வந்து

தொன்னலன் இழந்தவென் பொன்னிறம் நோக்கி

ஏதிலாட்டி இவளெனப்

போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே

(நற்-56)
 

எனத் தலைவி  தன்னெஞ்சிற்கு  உயர்திணை  முடிபு தாராமல் அஃறிணை
முடிபே தந்தவாறு கண்டு கொள்க.
 

பிறவாறு வருவன  பற்றி எல்லாம் இனிவரும் நூற்பாக்களான் ஆசிரியர்
கூறுமாற்றான் அறிந்து கொள்க.
 

இதற்கு இளம்பூரணர்  கூறும் உரையும் விளக்கமும் சொல்லிலக்கணமாக
அமைதலன்றி,   ஈண்டைக்கு   ஒவ்வாமையறிக.   நச்சினார்க்கினியர்  தம்
வல்லுரைக்கேற்ப 'அசைதிரிந்தியலா' எனப் பாடங் கொள்வார்.
 

சூ. 198 :

நோயும் இன்பமும் இருவகை நிலையிற்

காமங் கண்ணிய மரபிடை தெரிய

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்

மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்

சொல்லா மரபின வற்றொடு கெழீஇச்

செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ

இருபெயர் மூன்றும் உரிய வாக

உவம வாயிற் படுத்தலும் உவமம்

ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி

(2)
 

க - து : 

மேற்கூறியவற்றான்  செய்யுட்   சொற்கள்   பொருள்   திரிந்து
இசைக்கும்   இடமும்   இசைக்கும்   முறைமையும்   அவற்றை
இசைப்போரும் பற்றி நிகழும்  ஒருசார் அகப்பொருட் கிளவிகள்
ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :  நோயும்   இன்பமும்.......   தெரிய   என்பது  =  பிரிவும்
புணர்வும்  காரணமாக  உறும்   துன்பமும்  இன்பமும்  ஆகிய இருவகை
நிலைமையுடைய  காம   ஒழுக்கத்தைக்  கருதிய  மரபினது இடம்  நன்கு
விளங்க   என்றவாறு.  இம்மரபு  ஈண்டு  இவ்வாற்றான் அமைந்தது  என
உணருவதற்கு "மரபு இடை தெரிய" என்றார்.