6) எழில் என்றது, அவ்வப் பருவத்தே பருவ வனப்பினைச் சிறப்பித்து நிற்கும் பொலிவாம். |
7) சாயல் என்றது, உள்ளத்தான் உணரத்தக்கதொரு மென்மைத் தன்மை 'நீரினும் இனிய சாயல்' என்றாங்கு வரும். |
8) நாண் என்றது, செய்யவும், பேசவும், எண்ணவும் தகாதனவற்றின்கண் சாராமல் தன்னைப் பேணிக்கொள்ளும் பண்பாகும். |
9) மடம் என்றது, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத தன்மை. |
10) நோய் என்றது, பிறர்க்குப் புலப்பட நில்லாத நெஞ்ச நலி வினை. இதனை " நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே" (குறு-4) என வருமாற்றான் அறிக. |
11) வேட்கை என்றது, இன்றியமையாது எனக்கருதும் பொருள்கள்மேற் செல்லும் நகையாகும். அஃதாவது நீர் வேட்கை போன்றதொரு அவாவாகும். |
12) நுகர்ச்சி என்றது, உவத்தலும் முனிதலுமின்றிப் பருப்பொருளும், நுண்பொருளும் ஆகியவற்றைப் பொறிகளானும் மனத்தானும் துய்க்கும் உயிர்க்குணமாம். |
இவற்றுள் உரு முதல் மடம் ஈறாய எட்டும் பெரும்பான்மையும் பெண்பாற்கும் ஏனைய இருபாற்கும் பொதுவாயும் அமைந்து வரும். அவைபோல்வன பிறவாவன : அன்பு, அருள், காதல், பொறை, மானம் முதலியவையாம். இவை நெஞ்சத்தாற் கொள்ளப்படும் என்றலின் இவை நாடகவழக்கான் அமையும் பொருள்கள் அல்ல உலகியல் வழக்காகிய பொருள்களேயாம் என்பது வரும் சூத்திரத்தான் விளங்கும். |
சூ. 249 : | இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் |
| அவையில் காலம் இன்மை யான |
(53) |
க - து : | மேற்கூறிய ஒப்பு முதலாகிய பொருள்கள் நல்லிசைப்புலவோரான் செய்யப்பெறும் புலனெறி வழக்கின்கண் எக்காலத்தும் திகழும் உள்பொருளேயாம் என்கின்றது. |
பொருள் : செய்யுள் செய்யும் நல்லிசைப் புலவோர் அகமும் புறமுமாகிய ஒழுகலாற்றிற்கு உரியராகக் கொண்ட இமையா நாட்டத்தவர் என்னும் புத்தேளிரிடத்தும், அலையெறியும் கடல் சூழ்ந்த நானில மாந்தரிடத்தும் மேற்கூறிய ஒப்பு முதலாகிய |