266மெய்ப்பாட்டியல்

இங்ஙனம்   எண்வகையாகக்   கோடல்    உய்ப்போனை   விடுத்துக்
காண்போனை   அடிப்படையாகக்   கொள்ளுங்கால்   என்பது   தோன்ற
நாலிரண்டாகும் எனவாளா கூறாமல் 'பாலுமாருண்டே" என்றனர்.
 

நாடகச் சுவைக்குரிய  காரணப்பொருள்கள்  பண்பும்  செயலும்  பற்றிப்
பலவாக அமையும், தமிழ் நாடகநூலார் அவைபற்றிக் கூறிய தொன்னூல்கள்
காணக்கிடையாமையான்      கடைச்சங்க       காலத்தைச்     சார்ந்தது
எனக்கருதப்பெறும் ஆசிரியர் சாத்தனார் இயற்றியருளிய கூத்துநூல்  நாடக,
நாட்டியச்  சுவைக்குரிய   குணங்களாகவும்   (பொருள்)   இழைகளாகவும்
கூறுவனவற்றை ஈண்டுக் காட்டுதும்.
 

கூத்துநூல்கூறும் குணம்  ஒன்பது :  அவையாவன  அமைதி,  ஊக்கம்,
ஒழுக்கம்,   இச்சை,   சினம்,   குறுக்கு,   மயக்கம்,  தேக்கம்,  திணக்கம்
என்பவையாகும்.
 

இழைகள் நாற்பத்தெட்டு : அவையாவன : கோபம், இச்சை,  சிறுமை,
சோர்வு, படபடப்பு, பாய்ப்புறுதல், அகங்காரம், பற்றுடைமை, வெறுப்புறுதல்,
கொடுமைசெய்தல், எடுத்தெறிந்து  பேசுதல்,  பொறாமை,  தாழ்மையுணர்வு,
பயம்,  தெவிட்டல்,  சோம்பல்,  மகிழ்தல்,  கையாறு,  அமைதி,  மயக்கம்,
களித்தல்,   வெறித்தல்,   பிடிவாதம்,   கவலை,   அழுகை,  நினைத்தல்,
நெட்டுயிர்ப்பு, பேதுறல், உறக்கம், கனவு,  விழிப்பு,  நாணம்,  தெய்வமுறல்,
பேய்மயக்கம், நஞ்சுறல்,  மிதப்பு,  காப்பு,  விதிர்விதிர்ப்பு,  நோக்கியறிதல்,
ஒப்புமை,  அகநோய்,  புறநோய்  சன்னிவெளி,  ஏமாற்றம்,  கொதிப்புறல்,
தயக்கம்,   பசி,    தாகம்    என்பவையாம்   (கூத்துநூல் சூ-29)  மேலும்
இழைகளாகக்  கொள்ளத்தக்கவை   என்ற  முறையில்  அந்நூல்  கூறுவன
வருமாறு
:
 

"தலைமயிர் விடைத்தல் தழைத்தலே தகைத்தல்

நுதல்பட படத்தல் முறுக்கலே மிறுக்கல்

கண்கள் கலத்தல் கடைத்துடி துடித்தல்

விட்டுவிட் டிருத்தல் வெறுமைநோக் குறுத்தல்

மூக்கது அடைத்தல் மூக்கிதழ் நடைத்தல்

வாயிதழ் மடித்தல் பல்கடி கடித்தல்

நாச்சுவை சுழித்தல் நனைத்தலே குழற்றல்

கனங்குழி குழித்தல் கவ்வகம் கடுத்தல்

மெய்ம்மயிர் பொடித்தல் வெப்புறல் வியர்த்தல்

பனிநடுக் குறுதல் பசலையே நமைத்தல்