உள்ளப்பட்டநகை என்றதனான் "நகுதக்கனரே நாடு மீக்கூறுநர் (புறம்-72) என்பது பகைவரைப் பேதைமையுடையாராகக் கருதிக் கூறலின் இதன்கண் அடங்குமென்க. |
சூ. 254 : | இளிவே இழவே அசைவே வறுமை என |
| விளிவில் கொள்கை அழுகை நான்கே |
(4) |
க - து : | இளிவு முதலாய நான்கு பொருள்பற்றி அழுகை தோன்றுமென்கிறது. |
பொருள் : இளிவு இல்லாத கோட்பாட்டினையுடைய அழுகையென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள் இழிவும் இழவும் அசைவும் வறுமையும் என நான்குமாம் எனக்கூறுவர் புலவர். |
இழிவென்பது எதுகை நோக்கி இளிவென நின்றது. அன்றி இளிவென்பதும் ஒரு சொல்விழுக்காடு எனினும் அமையும். நான்கே என்னும் ஏகாரம் ஈற்றசை. ஏனைய எண்ணுப் பொருளின. என்ப என்பது அதிகாரத்தான் வந்தது. இவை நான்கும் இருபாலும் பற்றிவரும். |
1. இழிவாவது : இகழ்தற்குரிய பண்பும் செயலும் நிலைமையும் பற்றிவரும் இழிதகவு. |
எ - டு :"கடல் கண்டன்ன" என்னும் அகப்பாடனுள் நீ மாணிழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தமையான் தன்னை இழிதகவு செய்ததாகக் கருதிய பரத்தை, |
"தன்முகத்து எழுதெழில் சிதைய அழுதனள்" (அக-176) |
என்றது தண்கண் அமைந்த இழிவுபற்றிப் பிறந்த அழுகை. |
"கயமலருண்கண்ணாய்" என்னும் கலியுள் "தானுற்ற நோயுரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்" எனத் தலைவன் இழிவந்தொழுகுதல் காரணமாகச் "சேயேன்மன் யானுந் துயருழத்தேன்" (கலி-37) எனத் தோழி கூறியது பிறரிழிவு காரணமாகப் பிறந்த அழுகையாம். |
2. இழவாவது :தாய், தந்தை, கணவன் முதலிய சுற்றத்தைப் பிரிதலும் பெறற்கரிய பொருளை இழத்தலுமாம். |
எ - டு : | "மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே" |
(புறம்-249) |
என்பது தன்கண் தோன்றிய இழவு பற்றிப் பிறந்த அழுகை. |