| "நின்னோய்த் தலையை யுமல்லை தெறுவர |
| என்னா குவள்கொல் அளியள் தானென |
| என்னழி பிரங்கும் நின்னொடு யானும்" |
(அகம்-73) |
எனத் தலைவன் பிரிவிற்குத் தோழி இரங்கினாள் என்றமையின் இது பிறர்கண் அமைந்த இழவுபற்றி வந்த அவலமாம். |
3. அசைவாவது : நிலையிற்றிரிதல். அஃதாவது பண்டைய உயர்வு முதலிய கெட்டுத் தாழ்வுற்ற நிலைமை, தாழ்வின் நீங்கி உயர்தலும் திரிபே எனினும் ஈண்டு அழுகைக்குப் பொருளாகக் கூறலின் நிலையின் இழிதலாகிய திரிபே கொள்ளப்படுமென்க. |
எ - டு : | வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும் |
| இன்னா இடும்பை செய்தாள் |
(கலி-141) |
என்பது தன்கண் தோன்றிய அசைவுபற்றிப் பிறந்த அவலமாம். |
| இல்வழங்கு மடமயில் பிணிக்கும் |
| சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே |
(புறம்-164) |
என்பது பிறர்கண் உற்ற அசைவுபற்றிப் பிறந்த அவலம். |
4. வறுமையாவது : இலம்பாடு. அஃதாவது தான் நுகர்தற்கு அவாவும் பொருளைப் பெறுதற்கியலா நிலைமை. |
எ - டு : | இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை |
| சுவைத்தொ றழூஉந்தன் மகத்து முகநோக்கி |
| நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென் |
| மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ |
| நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண |
(புற-164) |
இதனுள் "சுவைத்தொ றழூஉந்தன் மகவு" என்றது தனக்கு உற்ற வறுமைபற்றி வந்த அழுகை. |
| "மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் |
| மழைக்கண் என்மனையோள்" |
என்றது பிறர்க்குற்ற வறுமைபற்றிப் பிறந்த அழுகை. |
| "விளிவில் கொள்கை அழுகை" என்றதனான் |
| இன்ன விறலும் உளகொல் நமக்கென |
| மூதிற் பெண்டிர் கசிந்தழல் நாணிக் |
| கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை |
(புறம்-19) |
எனப் பெருமிதத்தான் வரும் உவகைக்கலுழ்ச்சி போல்வனவும் அழுகை என்னும் மெய்ப்பாட்டினுள் அடக்கிக் கொள்ளப்பெறும் என்பார் பேராசிரியர்; சுவை என்னும் நோக்கிற்கு இது பொருந்தும். மெய்ப்பாடு பெருமிதம் எனலே நேரிது. |